×

ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம்

ஜெயங்கொண்டம். மே8: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள உட்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மே தின கொண்டாட்டம் மற்றும் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட தலைவரும் முன்னாள் மாவட்ட செயலாளர் மறைந்த முருகேசன் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் கோரிக்கை விளக்க அரசியல் கலை நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது, சேகர் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த புகழேந்தி, அன்பழகன், செல்வராசு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக மாநில குழு உறுப்பினர்கள் வாலண்டினா, ஜெயசீலன், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர், தொடர்ந்து புதுகை பூபாலன் கலைக்குழுவின ரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மே தினத்தை முன்னிட்டு உட்கோட்டை கிராமத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.

The post ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist Communist Party ,Utkottai ,Jayangkondam ,Jayangondam ,Communist Party ,Communist Party of India ,Utkotai ,Ariyalur district ,Ariyalur Perambalur ,Murugesan ,
× RELATED தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...